******************************
~~~~~~~மனிதா...............
எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோவினை செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான். இன்னும் அவர்களுக்கு இழிவு தரும் வேதனையைத் தயார் செய்து வைத்திரு…
க்கிறான். (அல் குர்ஆன் 33: 57)
அல்லாஹ்தஆலாவுக்கு அதிருப்தியான காரியத்தைச் செய்பவர்கள். அவன் பொருந்தாததைச் செய்பவர்கள் என்பது அதன் கருத்து. ஈமான் கொள்ளாதிருத்தல், அவன் கட்டளைகளுக்கு மாறு செய்தல், தங்களது இச்சைகளைப் பின்பற்றுதல், இறைவனுக்கு மக்களிருப்பதாகவும், அவனுக்கு இணை துணை இருப்பதாகவும் கருதுதல், அவனது ஆற்றலை மறுத்தல், காலத்தைத் திட்டுதல், அல்லாஹ்வின் வலிமார்களை நிந்திப்பது அல்லாஹ்வை நிந்திப்பதாகும். அவ்வாறானவர்களை தன்னுடன் போரிட வருமாறு அல்லாஹ் அழைக்கின்றான். அல்லாஹ்வின் சின்னங்களை பழிப்பதும், ஏளனமாகக் கருதுவதும் அல்லாஹ்வை நிந்திப்பதாகவே கருதப்படும்.பெருமானார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஆலிஹி வஸல்லம் அவர்கள் பண்பு, குடும்பம், மார்க்கம் என்பனவற்றில் குற்றம் குறை காண்பது, நபியவர்களின் தரத்தினை மரியாதைக் குறைவாகக் கருதுவது அவர்களைப் புலவர், சூனியக்காரர் பைத்தியக்காரர் என்று கூறுதல், நபியவர்களின் அருமை மனைவிமார்களைப் பழித்தல், ஸஹாபாக்களை அவமதித்தல், இவற்றைத் தவிர புண்படும்படியான காரியங்களைச் செய்த யாவரும் அல்லாஹ்தஆலாவின் ரசூலை நோவினை செய்தவர்களாகவே கருதப்படுவார்கள்.எனது குடும்பத்தினரை கோபிக்காதீர்கள். இன்னும் எனது ஸஹாபாக்களைப் பழிக்காதீர்கள். அவ்வாறு அவர்களைப் பழிப்பதும் கோபிப்பதும் என்னைப் பழிப்பதற்குச் சமனானதாகும் என்றும் நபியவர்கள் நவின்றிருக்கின்றார்கள்.
நபிகள் பெருமானார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை சொல்லாலோ செயலாலோ நோவினை செய்வது ஹராமாகும் என்பதை எல்லா அறிஞர்களும் ஏகமனதாகக் கூறியிருக்கின்றனர். பெருமானார் அவர்கள் அணிந்த ஜுப்பாவை ஒரு முஸ்லிம் வேண்டுமென்று அண்ணளாரை அவமதிக்கும் எண்ணத்தில் அது அசுத்தமாக இருக்கிறது என்று கூறினால் கூட அது அவனை மதம் மாற்றத்திற்குத் தள்ளிவிடும்.
நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எவர்கள் எதிர்க்கின்றார்களோ அவர்கள் மிகத் தாழ்ந்தவர்கள் (அல்குர்ஆன் 58:20)
எனவே, அல்லாஹ் ரசூலுடைய விடயங்களில் தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் மேற்கொள்வது எவ்வாறு அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் நிந்திப்பதாகக் கருதப்படுமோ அவ்வாறே அவ்விருவருடைய ஏவல் விலக்கல்களுக்கு மாறு செய்வதும், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோவினை செய்வதாகவே கருதப்படும்.
நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள், இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி
விளக்கம்: எல்லாத் தேவைகளையும் அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்கும்படி அல்லாஹுவும் அவனுடைய தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் கூறுவது ஒருபுறமிருக்க, மேல்கூறும் பாடல், ஷாஹுல் ஹமிது வலியுல்லாவிடம் (அல்லாஹ் மிக நன்கறிந்தவன்) தேவையை கேட்டு போகச் சொல்லுகின்றது, அல்லாஹுவிற்கு மாத்திரம் பிரார்த்திக்கும்படி சொல்லப்பட்ட வணக்கத்தை, அல்லாஹுவின் படைப்புக்கும் செலுத்தும்படி கூறுவது, அல்லாஹுவிற்கு இணைவைக்கும் செயலில்லாமல் வேறு என்ன?
அல்லாஹ் அல்லாதவர்களால் எதையும் கொடுக்க முடியாது. அல்லாஹ்
கூறுவதைக் கேளுங்கள்..
1. அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன, அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகளெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியேற்கமாட்டார்கள், செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள், கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். 35: 13,14
2. மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. 22: 73
3. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! 7: 194
4. ”நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன, அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக. கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. 46:4,5
5. மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் – நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 40: 20
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக...
அஹமட் யஹ்யா...
ஹொரோவபதான.
அனுராதபுரம்.....






No comments:
Post a Comment