உள்ளம்
நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான வடிவில் படைத்திருக் கின்றோம்.'' (அல்குர்ஆன் 95:4)
''உடலில் ஒரு தசைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால், அனைத்து உறுப்புகளும் சீராக அமையும். அதுவே இதயம்'' (அல் ஹதீஸ்)
படைப்புகளனைத்திலும் சிறந்த படைப்பாக அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள மனிதன்
சிந்திக்கும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளான். இதுவே அவனின் சிறப்பாகும்.
ஏனெனில் தமது சிந்தனா சக்தி மூலம் படைத்தவனின் வல்லமையுணர்ந்து அவனுக்கு
முற்றிலும் வழிபடுதலே அதனின் நோக்கமாகும்.
மனித உடலே ஒரு மாபெரும்
விந்தையாகும். ஆகவே அதனை ''மாபெரும் உலகம்'' (ஆலமும் அக்பர்) என
வர்ணிக்கப்படுகிறது. உலகில் நாம் காணும் அனைத்துப் படைப்புகளின்
பிரநிதித்துவமும், மனித உடலில் காணப்படுவதே அதற்குக் காரணமாகும்.
மனித
உடலினமைப்பும், அதன் உறுப்புகளின் இயக்கமும் பேரற்புத மாகும். களிமண்ணில்
உருவாக்கப்பட்டுள்ள நமது உடலின் ஆராய்ச்சி, விந்தையின் சிகரத்திற்கே நம்மை
இட்டுச் செல்லும்.
இளைஞனே ... நீ
வீழ்ந்துகிடப்பது வீரமல்ல
சிலிர்த்து எழு
நாளைய நாட்கள்
உனக்கு வசந்த காலமாகட்டும்...

விழுந்ததற்காக
கவலைப்படாதே
விழுந்தால் தான்
நீ .... எழ முடியும்
எழுந்தால் தான்
சாதனைகள் உனக்கு
சந்தன மாலைகளாகும்...!

உன்னை நம்பு
உலகம் உனக்காக
காத்திருக்கிறது
செவிகளைத்திற
தன்னம்பிக்கை தென்றல்
உள்ளே வரட்டும்
இமைகளைத்திற
வெளிச்சம் உள்ளே வரட்டும்
இதயத்தைத்திற
வெற்றியின் விதைகள்
தன்னம்பிக்கையோடு
உன்னில் விதைக்கப்படட்டும்
சாதனைப்பூக்கள்
உன் முன் பூத்துக்குலுங்கட்டும்
இன்று நீ
விழித்தால் தான்
நாளைய நாட்கள்
உனக்கு சாமரம் வீசும் ...!
தோல்விகள் உன்னை
துவட்டி எடுத்தாலும்
அவைகளை படிக்கட்டுகலாக்கு
****************************************
அஹமட் யஹ்யா..
ஹொரோவபதான
அனுராதபுரம்.
SRI LANKA..
****************
துவட்டி எடுத்தாலும்
அவைகளை படிக்கட்டுகலாக்கு



No comments:
Post a Comment